Monday, November 9, 2009
வேண்டுகிறேன்!
மழையே நீ இயற்கையின்
வரப்பிரசாதம்!
மண்ணுக்கு வளத்தை
கொடுத்து,மரம் செடி கொடிகளுக்கு
செழிப்பையும் கொடுத்து,
அனைத்து உயிர்களின்
தாகத்தையும் போக்குகிறாய்!
உன்னை நான்
பெய்யவேண்டாமென
சொல்லவில்லை!
என்னவளின் குயிலினினும்
மேலான இனிய குரலை
கேட்கமுடியவில்லை
உன்னால்!
எனவே மாலைபொழுதில் மட்டும்
பெய்யவேண்டாமென
கேட்டுக்கொள்கிறேன்!
உன்னால் உலகிற்கு
நன்மையுண்டு அதே நேரத்தில்
எங்கள் இருவருக்கும் ஒரு
சிறு இடைவெளி
அந்த இடைவெளி
உன்னால் வரவேண்டாமென
வேண்டுகிறேன்!
மழையே எனது வேண்டுதல்
உனக்கு கேட்காமல்
போகலாம் ஆனால் என்னால்
என்னவளின் குயிலினினும்
மேலான இனிய
குரலை கேட்காமல்
இருக்கமுடியாது!
குறிப்பு: இங்கு என்னவள் My Baby My Heart அவர்கள்
ஒரு வியப்பான விஷயம்!
இன்று (09-11-2009)மழை பெய்யவில்லை
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment