Saturday, December 26, 2009
புதிய உறுதிமொழி!
மாநகர பேருந்து பயணம்
அதிகபட்சமாக 2 மணிநேரம்
இதில் கூட்டம் அதிகமாக
இறுப்பது ஒருமணிநேரம்
அதிலும் அதிக
கூட்டமிருப்பது
ஒரு அரைமணிநேரம்
இந்த அரைமணி நேரம்தான்
ஒரு மனிதனை மிருகமாக
மாற்றுகிறது
ஆம்!
சகபயணியின் கையோ,
காலோ தெரியாமல்
பட்டபோது அவன்
நடந்துகொள்ளும் விதம்
மிருகமே தோற்றுவிடும்!
எப்படியெல்லாம் பேசுகிறான்
எப்படியெல்லாம்
நடந்துகொள்கிறான்!
இவர்களையெல்லாம்
இந்திய பாகிஸ்தான்
எல்லையில் கொண்டுபோய்
விடவேண்டும்,
இவர்களை நமது இந்திய
இராணுவம் மறந்துபோய்
சேர்க்காமல் விட்டிருக்கிறார்கள்!
நமது உடன்பிறந்த அண்ணனோ,
தம்பியோ,அக்காவோ,தங்கையோ
அல்லது நமது உறவினர்களின்
கையோ, காலோ பட்டால்
இப்படித்தான் நடந்துகொள்வோமா?
நமது தேசத்தின் உறுதிமொழி
இன்னும் காகிதத்தில்தான்
இருக்கிறது உண்மையான
சகோதரத்துவம் இன்னும்
இல்லை இந்த தேசத்தில்!
இனி எல்லா பேருந்துகளிலும்
இருக்கவேண்டிய உறுதிமொழி
இதுதான்
புதிய உறுதிமொழி!
இது எனது பேருந்து,இதில் பயணிப்போர் என் உடன் பிறந்த சோதரர்கள்,
தங்கைகள்,அக்காக்கள்,எனை பெற்றெடுத்த பெற்றோர் மற்றும் எனது மாமியார், மாமனார் மற்றும் எனது எல்லா உறவினர்களும் இந்த பேருந்தில்தான் பயணம்
செய்கிறார்கள் அவர்களுக்கு இடையுறு தராமல் நான் பயணம் செய்வேன் என நான் உறுதி கூறுகிறேன்,இவர்களின் கையோ, காலோ பட்டால் அது எனக்கு எந்தவித பாதிப்பையும் தராது.
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment