Monday, December 21, 2009

எதை அழிப்பது?

வேலை இல்லையென்று
யார்சொன்னது?

வேலை இருக்கிறது
செய்யயாரும் இல்லையா?

வேலை செய்ய
ஆயிரம்பேர் இருக்கிறார்கள்
ஆனால் ஊதியம்தான்
இல்லை!

ஆம்!
கல்விக்கேற்ற வேலை இல்லை
வேலைக்கேற்ற ஊதியம் இல்லை,
திறமைக்கும், அனுபவத்திற்கும்
மரியாதையும் இல்லை!

ஆம் எனது 33 வயதில்
நான் வாங்கிய ஊதியம்
மாதம் ரூபாய் 3500,

இதை ஒரு குறையாக நான்
ஒருபோதும் எண்ணியதில்லை!

இது எனக்கு மட்டும் அல்ல
நமது இந்திய தேசத்தில்
என்னைப்போல்
ஆயிரக்கணக்கானோரின்
நிலைமையும் இதுதான்

இந்த நிலைமை
தொடருமேயானால்
நமது நாடு எப்படி
ஒரு வல்லரசாக
மாறும்?

தனி ஒருவருக்கு
உணவில்லையெனில் ஜகத்தை
அழித்திடுவோம் என்று பாடினான்
பாரதி அன்று!

இன்று தனி ஒருவருக்கு வேலைக்கேற்ற
ஊதியம் இல்லையெனில் எதை அழிப்பது?


இதையும் கவனியுங்கள்!

நமது இந்திய தேசத்தில் இன்று விரல்விட்டு எண்ணமுடியாத அளவிற்கு கட்சிகள் பெருகிவிட்டன,இருகின்றன,அதுமட்டுமா?எத்தனை தொழிற்சங்கங்கள் இருக்கின்றன,கட்சிகளும் இவர்களும் அரசாங்க தொழிலாலர்களுக்காகத்தான் போராடுகிறார்களே தவிர தனியார் நிறுவனங்களில் நடப்பவற்றை எவரேனும் கவனிக்கிறார்களா?அப்படியே அதற்காக குரல் கொடுத்திருந்தாலும் அதன் மூலம் தங்களுக்கு ஏதாவது ஆதாயம் இருப்பதால்தான் செய்கிறார்களே தவிர உண்மையான நோக்கத்துடன் யாரும் குரல் கொடுப்பதில்லை இதுதானே உண்மை,

எப்பொழுது இவர்களால் தனியொரு மனிதனுக்கு நியாயமாய்
கிடைக்கவேண்டியவை கிடைக்கவில்லையோ அப்பொழுதே இவர்கள் இருப்பது அவசியமில்லை.

Inak:-)













No comments: