Wednesday, September 15, 2010

காதல்!













பதினெட்டு வயதில்
வருவது பருவ காதல்
இது அழகையும், அளவையும்,
உருவத்தையும் மட்டுமே பார்க்கும்

இருவத்திரெண்டில்
வருவது உள்ளத்தை
மட்டுமே பார்க்கும்
உருவத்தை பார்க்காது

முப்பத்தி ரெண்டில் வருவது
உருவத்தையும் பார்க்காது
உள்ளத்தையும் பார்க்காது
குடும்பத்தின் வளர்ச்சியையும்
எதிர்காலத்தையும் பார்க்கும்

அறுபதுக்கு மேல் வருவது
தன் மடிமீது தவழ ஒன்றும்
தான் மடிசாய ஒன்றையும்
பார்க்கும்.

2 comments:

Anonymous said...

காதல் போதனை....வேதனையா? பூசித்த பூக்கள் சிரிக்க ...யாசித்தேன்...காதல் வரம்... ? உன்னை பார்த்ததும் காணாமல் போகிறேனே ஏன்? கருத்து அழிந்ததா ஏன் காதல்? ஏன் கவிதைக்கு கரு...தந்து விட்டாய்..


SASIKALA

Anonymous said...

அழகையும், அளவையும்,
உருவத்தையும் உள்ளத்தையும் பார்க்கும்
குடும்பத்தின் வளர்ச்சியையும்
எதிர்காலத்தையும் பார்க்கும்
உண்மை காதல் !!
அதற்கு வயது இல்லை !!
உண்மை அன்பு சாகும் வரை தொடரும் !!