Tuesday, September 21, 2010
எப்படிச்சொல்வது? 26/03/2008
கருவறையில் ஈரைந்து
மாதம் கஷ்டப்பட்டு
சுமந்து பெற்று வளர்த்த
தாயிடம் எப்படிச்சொல்வது
நான் செய்த வேலையை
விட்டேன் என்று?
தினந்தோறும் காலையில்
சொல்வளே இரண்டிட்டிலியாவது
சாப்பிட்டுவிட்டு போடாவென்று!
மதியம் இரண்டு மணிக்கு
போன் செய்து கேட்பாளே
சாபிட்டாயாவென்று!
சனிக்கிழமை இரவு
கேட்பாளே நாளைக்கும்
வேலைக்கு போக வேண்டுமாவென்று!
எப்படிச்சொல்வது அவளிடம்
என் தாய் முகத்தை பார்க்கவே
இன்று வெட்கப்படுகிறேன்
இன்றும் எண்ணியிருப்பாள்
மகன் வேலைக்கு சென்றிருக்கிறான் என்று
அவளிடம் எப்படி சொல்வது
நான் செய்த வேலையை
விட்டேன் என்று?
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
அருமையான பதிவு தோழரே ஏன் வேலையை விட்டீர்கள்
Post a Comment