நான் தெய்வ நம்பிக்கை
இல்லாதவன் இல்லை!
கடவுள் இல்லையென்று
சொல்லும் நாத்திகனும் இல்லை!
ஆனால்
மனித குலத்திற்கு அப்பாற்பட்ட
சக்தி ஒன்று இருக்கிறது
அது கல்லை விநாயகர் என்றும்,
மரத்தை சிலுவை என்றும்,
நிலவை பிறை என்றும்
வணக்குகிறது இந்த உலகம்!
இந்த கல்லும்,மரமும்
பிறையும் மனிதனை
நல்வழிப்படுத்துவதர்க்காகத்தான்
உருவாக்கப்பட்டன!
ஆனால் இன்று
இவைகளின் பெயரை சொல்லி
மனித குலத்தை
நாசப்படுத்திக்கொண்டிருக்கிறது
ஒரு கூட்டம்
ஏ மனிதனே
மீண்டுமொருமுறை சொல்கிறேன்
மதங்கள் மனிதனுக்காக அன்றி
மனிதன் மதத்திற்காக அல்ல!
இதை உணர்ந்து நடந்து கொள்!
Inahk:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment