Saturday, August 7, 2010

முக்குரோடு!


கடவுளுக்கும்
கற்சிலைதான்!

கடவுள் இல்லையென்று
சொன்னவர்க்கும்
கற்சிலைதான்!

கடவுளின் சிலை
தினந்தோறும்
குளிப்பாட்டப்படுகிறது

இவரோ மழை
பெய்தால் குளிக்கிறார்

கடவுளுக்கு நெய்யாலும்
பாலாலும் அபிஷேகம்
செய்யப்படுகிறது

இவருக்கு பறவைகளின்
எச்சம்தான்!

கடவுளுக்கு
தினந்தோறும் மாலை
அணிவிக்கப்படுகிறது

இவருக்கு பிறந்தாநாள்
மற்றும் நினைவுநாளின்
போது மட்டுமே!

கடவுளின் சிலை விலை உயர்ந்த
பொருட்களால் செய்யப்படுகிறது

இவருக்கோ அதிக பட்டசம்
வெண்கலம்

கடவுளின் சிலை
மூலஸ்தலம்!

இவரோ முக்குரோடு!

No comments: