மனிதன் நான்கெழுத்து
சாதி வெறும் இரண்டெழுத்துத்தான் ஆனால் இது எத்தனை பேரை வாழ வைத்திருக்கிறது எத்தனை பேரை கொன்று குவித்திருக்கிறது,எங்கு பிறந்தது இந்த சாதி?
இப்போது நான் இதை ஆராய்ச்சி செய்ய விரும்பவில்லை,
சாதி இரண்டொழிய வேறில்லை என்று சொன்னான் பாரதி ஆனால் இன்றோ இரண்டாயிரம் சாதிகளிருக்கும், நான் கேட்க நினைப்பது இதுதான் இந்த கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?
சாதி சாதி என்று சொல்கிறிர்களே நீங்கள் எந்த சாதியோ அந்த சாதிக்காரன் விளைச்சலில் உருவான உணவையா சாப்பிடுகிறிர்கள்?
நீங்கள் உடுத்தும் உடை உங்கள் சாதிகாரனால் நெய்யபட்டதா?நீங்கள் படித்த பள்ளி, நீங்கள் வேலை செய்யும் இடம், இங்கெல்லாம் உங்கள் சாதிக்காரன் தான் இருக்கிறானா?
நீங்கள் பயன்படுத்தும் வண்டிகள் கார், பைக், சைக்கிள் மற்றும் நீங்கள் பயணம் செய்யும் பேருந்து இரயில் வண்டி ஆகியவை உங்கள் சாதிக்காரன் தயாரித்ததா?
ஒரே சாதியில் திருமணம் செய்ய நினைக்கிறிர்கள் ஐந்து நிமிட சுகத்திற்காக தேடும் வேசி அதே சாதிகார பெண்ணையா தேடுகிறிர்கள்?மனைவி மட்டும் அதே சாதியில் வேண்டும் வேசி மட்டும் வேறு சாதியா?வெட்கமாயில்லை?
உடல் நலம் சரியில்லை என்றால் மருத்துவரை பார்க்கிறிர்கள் அந்த மருத்துவர் உங்கள் சாதிகாரரா?
சாலையில் தீடிரென்று ஏற்பட்ட விபத்தின்போது உங்களை உங்கள் சாதிகாரந்தான் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றாரா? அல்லது சென்றிருக்கிறாரா? அங்கு உங்களுக்கு முதலுதவி அளித்தது உங்கள் சாதியை சார்ந்த மருத்துவர்தானா? அப்போது தேவைப்பட்ட இரத்தம் உங்கள் சாதிக்காரரின் இரத்தம் தான் உங்களுக்கு ஏற்றப்பட்டதா?
நீங்கள் முடி வெட்டுகிறிர்களே அவர் உங்கள் சாதிகாரனா?
நீங்கள் இருக்கும் வீடு, வானொலி, தொலைக்காட்சி, செல்போன்,மின்சாரம் பயன்படுத்தும் சாலை உங்கள் சாதிக்காரன் கட்டியதா?
நீங்கள் பயன் படுத்தும் வங்கி பணம்பெறும் தானியங்கி சாதி பெயரையா போட சொல்கிறது?இப்போது பார்த்து படித்து கொண்டிருக்கும் இந்த கணினியும் இணைய தளமும் சாதி பெயர் போடு என்று சொல்லவில்லை?
type ur user id enter ur password என்றுதான் இருக்கிறது,
அவ்வளவு ஏன் இறந்த பிறகு உங்கள் உடலை தூக்கி சென்று அடக்கம் செய்கிறது வரை உங்கள் சாதிகாரன் தான் செய்கிறானா?
உண்மையான சாதி என்றால் தாயின் கருவறையில் ஆரம்பித்து பூமித்தாயின் கருவறைக்கு (கல்லறை) வரை எல்லாமே அதே சாதியாகத்தான் இருக்கவேண்டும் அதுதான் உண்மையான சாதி அவன்தான் உண்மையான சாதிக்காரன்,
எனக்கு பிறக்கும் குழந்தையை பிரசவம் பார்க்கிறது எனது சாதிக்காரன்,எனது குழந்தை படிக்கும் பள்ளிக்கூடம் மற்றும் அதை கட்டியது எல்லாமே எனது சாதிக்காரன் நான் உடுத்தும் உடை, உண்ணும் உணவு, நான் பயன் படுத்தும் வாகனம் சாலை,வானொலி, தொலைக்காட்சி, செல்போன்,மின்சாரம் இப்படி எல்லாமே எனது சாதிக்காரன் செய்ததாகத்தான் இருக்கவேண்டும்,
இப்படி எந்த சாதிக்காரன் இருக்கிறானோ அவன்தான் அந்த சாதிதான் ஒரு உண்மையான சாதி
அப்படி பார்த்தால் அது மனித சாதி ஒன்றுதான்
ஆனால் ஒரு சிலருடைய சுயநலத்திற்காக இன்னும் சாதியை பயன்படுத்தி மக்களை முட்டாள் ஆக்கப்பட்டுவிட்டனர், முட்டாள் ஆக்குவதை நிறுத்துங்கள்,
சாதியால் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு சிலரே தவிர அந்த ஒட்டு மொத்த சாதி அல்ல,எந்த சாதி கார அரசியல் வாதியும் அரசாங்கம் ஒதுக்கிய அல்லது அரசாங்கம் அமல் படுத்திய எந்த நல திட்டத்தையும் முழுமையாக அந்த சாதிக்கு செய்வது கிடையாது, ஏன் அந்த கட்சியின் தொண்டனுக்கு கூட போய் சேருவது கிடையாது இதுதான் காலம் காலமாக இந்த இந்திய தேசத்தில் நடந்து கொண்டிருப்பது, இதில் அப்படி இல்லை என்று உங்களால் ஏதேனும் ஒரு சாதி தலைவரை சொல்லமுடியுமா? அல்லது முழுமையாக பயனடைந்த ஒரு சாதியை காட்ட முடியுமா?
வாழ்கை ஒருமுறைதான் வரும்,அதில் எதற்காக சாதியாலும் இனத்தாலும் மொழியாலும் பிரிந்து நமது மனித இனத்தை நாமே அழித்து கொள்ள வேண்டும்.
நீங்கள் சொல்லலாம் (கேட்கலாம்) நீயும் நானும் சேர்ந்து சாதியை உடனே ஒழித்து விட முடியாது என்று,நியாயமானதுதான்,முதல் இந்திய சுதந்திரப் போர் நடை பெற்று நூறு ஆண்டுகள் கழித்துதான் நமது இந்திய தேசம் சுதந்திரம் அடைந்தது,அதை ஆரம்பித்தவர்களில் எத்தனை பேர் சுதந்திரம் அடைந்தபோது உயிருடன் இருந்தார்கள் என்று எனக்கு தெரியாது
அதைப்போல இன்று ஒரு சாதி ஒழிப்பு போர் நடந்தால் ஒரு நூறு ஆண்டுகள் கழித்து சாதியில்லா ஒரு தேசம் இருக்கும் அன்று நாம் இருப்போமோ இருக்க மாட்டோமோ ஆனால் நமது தலை முறையினர் சாதியில்லா இந்திய தேசத்தில் கத்தியின்றி இரத்தமின்றி சந்தோசமாக இருப்பார்கள்.
மனிதனை மனிதனாக மதிப்போம்
மனித குலம் காப்போம்.
தயவு செய்து உங்கள் கருத்துகளை சொல்லவும்.
Subscribe to:
Post Comments (Atom)

6 comments:
V.MURTHI59: wow super. ippadi oru puratchi erpada vendum
wow super ungal sevai engaluku thevai ippadi oru nalla karuthai neengal anaivarukum eduthu solla vendum frnd
சாதி
சில சுயநலவாதிகளின் சதி
சில நயவஞ்சகர்கள் உருவாக்கிய நீதி
இதை ஒழிக்க நமக்கு வேண்டும் மதி
இந்த உணர்வை உருவாக்குபவர்களை அழிக்க வெடிக்க வேண்டும் புரட்சி தீ
சிந்திக்க வைக்கும் சொல்,
Good Dear. but you know about me. i have found 6 spelling mistake.
S. Amudha:
anyway it was nice
Post a Comment