Friday, August 27, 2010

நவீன தமிழ் பாட்டு !



செந்தமிழ் நாடெனும்
போதினிலே துன்பம்
தேடி வருது தன்னாலே!

எங்கள் தந்தையர்
நாடெனும் பேச்சினிலே
தமிழ் மானம் போகுது ஈழத்திலே!

காவிரி தென்பெண்ணை
பாலாறு தமிழன் கை
ஏந்த வைத்த பெரு நதி

என மேவிய ஆறு பல
ஓடியும் வறண்டு கிடக்குது
தமிழ்நாடு!