வெகு நேரமாக தேடிக்கொண்டிருந்தான் சுகுமார் அவனுக்கு திருப்தியாக கிடைக்கவில்லை இறுதியில் ஒரு அட்டையை தேர்ந்தெடுத்தான் ஆம் அவன் தேடிக்கொண்டிருந்தது திருமண அழைப்பிதழ் கடையில்,இருந்தஉதவியாளரிடம்
இந்த அட்டை எனக்கு வேண்டுமென்றான் கடைக்காரர் எத்தனை அழைப்பிதழ் வேண்டுமென்று கேட்டார் இவன் வெறும் 6 அழைப்பிதழ் தான் வேண்டுமென்றான் சரி அங்க போய் பணத்த கொடுத்துட்டு வாங்க என்றார் அந்த உதவியாளர்
சுகுமார் கேட்டான் நீங்களே அச்சடித்து கொடுப்பிர்களா என்று கேட்டான் அதற்கு உதவியாளர் கொடுப்போம் என்று சொன்னார் அதன் விபரங்களை அங்கு போய் கேளுங்கள் என்று சொன்னார் சுகுமாரும் அங்கு சென்றான் இந்த விபரங்களை இந்த அட்டையில் அடித்து தரவேண்டுமென்று சொன்னான்
அவர் அதை ஒருமுறை படித்து பர்ர்த்தார் அதில் இருந்தவை
இறப்பு அழைப்பிதழ்
அன்புடையீர், நிகழும் மங்களகரமான விரோதி வருடம் வைகாசி மாதம் 21 ஆம் தேதி ( 04-06-2009) வியாழக்கிழமை சுக்ல பட்சம் சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.30 மணிக்குமேல் 11.30 மணிக்குள் திருவள்ளூர் மாவட்டம் திருநல்லூர் திரு.குமாரசாமி அவர்களின் மகன் திருநிறைச்செல்வன்சுகுமாரன்ஆகிய நான் இறக்க உள்ளதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ் வருகை தந்து எனது ஆன்மா சாந்தியடைய செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்
அவருக்கு ஒன்றும் புரியவில்லை இதையா அச்சடிக்க வேண்டுமென்றுகேட்டார்
சுகுமார் ஆமாம் என்று சொன்னான்
அவருக்கு ஒன்றும் புரியவில்லை அவரும் சரி என்று சொல்லிவிட்டு அச்சடிக்க ஆரம்பித்தார்.
குறிப்பு:
தற்கொலை செய்வதும் தற்கொலை செய்ய துண்டுவதும் நமது இந்திய சட்டப்படி குற்றமாகும்.
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment