Thursday, November 19, 2009

தெரியவில்லை!

நான் மனிதனாக
வாழ விருப்பப்பட்டேன்!

வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
ஆனால் நான் யாரென்று
எனக்கே தெரியவில்லை!

காரணம் எப்படிப்பட்ட
மனிதனாக வாழவேண்டுமென
தெரியாமல் என்னை
செதுக்கியிருக்கிறேன்!

Inak:-)

சொல்ல விரும்பிய விஷயங்கள்!

சொல்ல விரும்பிய விஷயங்கள்!
இதை எழுத நினைத்தது சில மாதங்களுக்கு முன்பு ஆனால் இப்போதுதான்ஆரம்பித்திருக்கிறேன்.

மனிதராக பிறந்த எல்லோருக்கும் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த,சந்தித்த அனுபவித்த,கஷ்டப்பட்ட விசயங்களை யாருடனேனும்சொல்லவேண்டுமென்கிற எண்ணம் ஆசையாகவோ, விருப்பமாகவோஇருக்கும்,இருந்திருக்கிறது, (இதில் எந்தவித மாற்றமும் இல்லையே)

சிறு குழந்தை அம்மாவிடமோ அல்லது அப்பாவிடமோ தான் பார்த்த அல்லதுமகிழ்ந்த விசயங்களை சொல்லுவார்கள், பள்ளிப்பருவத்தில் பள்ளியில்நடந்தவற்றை சொல்லுவார்கள்,தனது வீட்டில் நடந்தவற்றை தனது பள்ளிநண்பர்களிடம் சொல்லுவார்கள்,பண்டிகையின் போது பெற்றோர் எடுத்துகொடுத்த புது துணி புது சட்டை இவற்றைப்பற்றி
பேசுவார்கள்,பகிர்ந்துகொள்வார்கள்,

அதே கல்லுரிப்பருவத்தில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தான் பார்த்தபெண்ணையோ ஆணையோப் பற்றி யாரிடமேனும் சொல்லவேண்டுமென்ற எண்ணமிருந்திருக்கும்,சொல்லியுமிருந்திருப்பார்கள்,

புதிதாக திருமணமான பெண் அவளது கணவரைப்பற்றி தனது அம்மாவிடம்சொல்லவேண்டுமென்ற ஆசை இருந்திருக்கும்,
கணவனுக்கும் தனது மனைவியிடம் தன்னைப்பற்றி சொல்லவேண்டுமென்றஆசை இருந்திருக்கும்,இது போல மனைவியும் எண்ணியிருப்பாள்,

ஒருசிலர் தனது அனுபவங்களை கவிதைகளாக,கட்டுரைகளாக,சிறுகதைகளாகசொல்லியிருக்கிறார்கள் அதன் மூலமாக நல்ல கதைகள், கவிதைகள்,கட்டுரைகள், நல்ல திரைப்படங்கள், நல்ல பாடல்கள், உருவாகிருக்கின்றன,

ஒருசிலர் தன்னைப்பற்றி சொல்ல விருப்பபட்டதால்தான் சுயசரிதைகள்வந்திருக்கின்றன,

இங்கு நான் சொல்ல விரும்பிய விஷயம்? யாரிடம் சொல்லவேண்டும்?எதற்காகசொல்லவேண்டும்? என்கிற ஒரு கேள்வி என்னுள் எழுகிறது!இருந்தபோதிலும்
சொல்லவேண்டுமென்கிற எண்ணம், விருப்பம் மட்டும் என்னைவிட்டபாடில்லை,இருந்தபோதிலும் மனது சொல்கிறது சொல்லிவிடுவென்று
எனவே சொல்கிறேன் நான் சொல்ல விரும்பிய விஷயத்தை

நான் சொல்லவிரும்பியது என்னைப்பற்றி, நான் வாழ்ந்து வந்த வாழ்க்கைமுறையைப் பற்றி, எனது பழக்க வழக்கங்களைப்பற்றி..

சொல்லவிரும்பிய அந்த நபர் ஒருவேளை எனக்கு திருமணமென ஒன்று நடந்தால், எனது வாழ்க்கை துணைவியாக வரும் ஒரு பெண்ணிடம்தான்..

ஏன் அந்தப்பெண்ணிடம் எல்லாவற்றையும் சொல்லவேண்டும்? திருமணம் செய்து கொண்ட ஒரு பெண் வெறும் சுகத்திற்காக மட்டும் அல்ல அவள்தான் வாழ்க்கைத்துணைவி, வாழ்க்கைத்துணைவி என்றால் என்ன?

தொடரும்.....

Inak:-)

Wednesday, November 18, 2009

காலம் இரண்டு!

உலக வரலாற்றில்
காலம் இரண்டு
பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது

அவை கிமு,கிபி என்று
அதுபோல எனது
வாழ்கையிலும்
இரண்டு காலங்கள் உண்டு

அவை நான்
என்னவளை
பார்ப்பதற்கு முன்பு!(BB)
என்னவளைப்
பார்த்த பின்பு!(AB)

குறிப்பு: என்னவள் My Baby My Heart அவர்கள்

Inak:-)

Tuesday, November 10, 2009

வருத்தம்!

எனது திருமணத்தைப்பற்றியும்,
எனைப் பார்த்த பெண்வீட்டார்
எனை வேண்டாமென
சொன்னதற்காகவும்,
ஒரு போதும் நான்
வருத்தப்பட்டது கிடையாது!

காரணம் அவர்களைவிட
அளவுக்கதிகமாக என்னவளின்
அன்பிருப்பதால்!

இருந்தபோதிலும்

நான் என்னவளைப்பற்றியும்,
என்னவள் என்மீது காட்டும்
அன்பைப்பற்றியும்
எங்களின் நடப்பைப்பற்றியும்,

எப்பொழுதும் இடைவிடாமல்
(Non Stop FM) சொல்ல
ஒருத்தி கிடைக்காமல்
போய்விடுவலோவென
அஞ்சுகிறேன்!


குறிப்பு : இங்கு என்னவள் MyBaby MyHeart அவர்கள்

Inak:-)

Monday, November 9, 2009

வேண்டுகிறேன்!


மழையே நீ இயற்கையின்
வரப்பிரசாதம்!

மண்ணுக்கு வளத்தை
கொடுத்து,மரம் செடி கொடிகளுக்கு
செழிப்பையும் கொடுத்து,
அனைத்து உயிர்களின்
தாகத்தையும் போக்குகிறாய்!

உன்னை நான்
பெய்யவேண்டாமென
சொல்லவில்லை!

என்னவளின் குயிலினினும்
மேலான இனிய குரலை
கேட்கமுடியவில்லை
உன்னால்!

எனவே மாலைபொழுதில் மட்டும்
பெய்யவேண்டாமென
கேட்டுக்கொள்கிறேன்!

உன்னால் உலகிற்கு
நன்மையுண்டு அதே நேரத்தில்
எங்கள் இருவருக்கும் ஒரு
சிறு இடைவெளி
அந்த இடைவெளி
உன்னால் வரவேண்டாமென
வேண்டுகிறேன்!

மழையே எனது வேண்டுதல்
உனக்கு கேட்காமல்
போகலாம் ஆனால் என்னால்
என்னவளின் குயிலினினும்
மேலான இனிய
குரலை கேட்காமல்
இருக்கமுடியாது!

குறிப்பு: இங்கு என்னவள் My Baby My Heart அவர்கள்

ஒரு வியப்பான விஷயம்!
இன்று (09-11-2009)மழை பெய்யவில்லை


Inak:-)