Wednesday, April 29, 2009

மனைவிகள் ஜந்து!


திருமணம்

அம்மி மிதித்து ,அருந்த்திப்பார்த்து,
அக்னிசாட்சியாக ஒரு
ஆணுக்கும் பெண்ணுக்கும்
நடப்பதுதானோ?

மனதால் மானசிகமாக
மணந்தால் அது
திருமணமாகாதோ?

எனை எல்லோரும் கேட்கின்றனர்
எப்போது திருமணமென்று!
அது நடந்தால் திருமணமில்லை
மறுமணம் ஆம்!

எனக்கு ஏற்கனவே
நடந்துவிட்டது திருமணம்!

அக்னிசாட்சியாகவோ
அருந்த்திப்பார்தோ
அம்மிமிதித்தோ அல்ல!

மனதால் மானசிகமாக
மணந்துகொண்டேன் ஆம்!

எனது முதல் மனைவி
நான் படித்து நான் வேலைப்பார்த்த்
எனது துறை Dept.Of Microbiology!

இரண்டாவது மனைவி
எனை உருவாக்கிய எனது
கல்லுரி JCAS!

மூன்றாவது மனைவி
என்னை செதுக்கிய
என்னுடைய எண்ணங்கள்!

நான்காவது மனைவி
எனது இந்திய தேசம்!

ஜந்தாவது மனைவி
எனது எதிர்காலத்தை
காண்பித்த எனது
Baby My Heart!

எனக்கு ஜந்து மனைவிகள்
இருக்கும்போது அடுத்து
நடந்தால் அது மறுமணம்தானே!

இதை அறியாதவர்கள்
கேட்கின்றனர் எப்போது
திரு
மணமென்று?

நான் என்ன சொல்வது?

Inak:-)







Tuesday, April 28, 2009

புதிய மனிதர்கள்!


வணக்கம்!
இது ஒரு கற்பனை இதை நான் நான்கு வருடத்திற்கு முன்னாள் நினைத்தது இன்றுதான் இதற்கு உயிர்கிடத்துள்ளது,வருங்காலத்தில் இதுபோல் நடக்க வாய்ப்புகள் உள்ளது,

இந்த கற்பனைக்கு உயிர்கொடுப்பத்ர்க்காக ஒருசில நிகழ்ச்சிகளை சேர்த்துள்ளேன்,அது என்னவென்று நீங்களே படித்துப்பாருங்கள்.

என்றைக்குமிலாமல் இன்று சென்னை விமானநிலையம் ரொம்ப விறுவிறுப்பாக இருந்தது காரணம் ஒரு தனியார் தமிழ் தொலைக்காட்சி நடத்திய ஒரு பரிசுப்போட்டியில் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அமெரிககாவில் உள்ள நியூயார்க் நகரத்திற்கு இலவசமாக அழைத்து செல்லப்படுகிறார்கள்,


தேர்வு செய்யப்பட்டது மொத்தம் பத்து பேர் இதில் தென் தமிழகத்திலிருந்தும் ஒருசிலர் வந்திருந்தனர்,இதை ஏற்பாடு செய்திருந்த தலைமை நிர்வாகி ஒவ்வொரு வரையும் அறிமுகம் செய்து வைத்தார் ஆனால் வந்தவர்கள் எப்போதும் கிளம்புவோம் என்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர்,


ஒருவழியாக அனைவரும் விமானத்தில் அமர்ந்தனர் இவர்களோடு சேர்த்து மொத்தம் 117 பயணிகள் இருந்தனர் விமானம் கிளம்பியது,

சென்னையை விட்டு கிளம்பி கடல் கடந்து மேலே பறந்துகொண்டிருந்தது
விமான பணிப்பெண் பயணிகளை கவனித்து கொண்டிருந்தனர்,
திடிரென்று விமானம் தடுமாறியது விமானி அனைவரையும் சிட் பெல்டை அணியுமாறு அறிவுறுத்தினார் பயணிகள் சற்று பயந்தனர்,

விமானி அருகில் உள்ள விமான நிலையத்திற்கு தொடர்பு
கொள்கிறார் ஆனால் முடியவில்லை,திடிரென்று விமானம் முழு கட்டுப்பாட்டை இழந்து
தாறுமாறாக பறக்கிறது பயணிகள் அனைவரும் கூச்சளிடுகின்றனர்,
ஒரு பயங்கர சத்தம் ஏதோ வெடித்து சிதறுகிறது ஆனால் என்னவென்று தெரியவில்லை ஆம் வெடித்து சிதறியது வேறெதுவுமில்லை பூமிதான்!

பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்த பூமி அன்று வெடித்து சிதறியது எந்தனை வகையான உயிரினங்கள் இருந்தன எத்தனை அதிசயங்கள் இருந்தன அனைத்தும் அன்று இருந்த இடம் தெரியாமல் போனது

இதற்கெல்லாம் என்ன காரணம் மனிதன் தன்னுடைய அதித புத்தியால் வளர்சியால் தன்னை மட்டுமே காத்துக் கொள்ளவும் தனக்கு மட்டுமே எல்லாம் வேண்டு மென்றும் தான் சுகமாக இருக்கவேண்டுமென்றும் கண்டுபிடித்தான் ஆனால் அவன் இயற்கையை காக்க மறந்துவிட்டன் அதன் விளைவுதான் இது அது மட்டுமா?

காடுகளை அழித்தான் கடலில் மிதந்தான் அதையும் மாசு படுத்தினான்தொழிற்சாலைகளை நிறுவினான் காற்றின் தூய்மையையும் கெடுத்தான் அணு ஆயுதங்களை கண்டுபிடித்தான் அதை பரிசோதித்தான்,


இனபடுகொலை,சாதிகொலைகள், திவிரவாதம்,மதவாதம்,
அது மட்டுமா? பெண்களை மதித்தானா? இணையதளத்திலே எப்படியெல்லாம் பேசுகிறான் அவனுக்கு தாய் தங்கையர்கள் இருக்கிறார்களா? இல்லையா? தெரியவில்லை அவனை பெற்றது ஒரு பெண் அதையும் அவன் மறந்து விட்டான் போலிருக்கிறது அதுமட்டுமா?

இப்போது ஒரு புதிய கலாச்சாரம் வந்திருக்கிறது அது
Incset Sex அதற்கு அவன் சொல்லும் பெயர் இரத்த பந்த உடலுறவு இதை நான் எங்கு போய் சொல்வது இங்கு நான் கேட்டுக்கொள்வது பெண்களே தயவு செய்து உங்களது புகைபடத்தை எக்காரணம் கொண்டும் இணைய தளத்தில் வைக்காதிர்கள் அது கல்யாண மாலை தளமாக இருந்தாலும் சரி உங்கள்தளமாக இருந்தாலும் சரி இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...

ஆனால் மீண்டுமொரு பூமி கிடைக்குமா?

பூமி வெடித்து சிதறியது அதே நேரத்தில் பூமி இருந்த இடத்தில் வேறு ஒரு
கோள் வந்ததது

(இனி விமானத்தைப் பார்ப்போம்)

விமானம் தடுமாறி ஒரு வழியாக ஒரு இடத்தில் போய் விழுந்து நொறிங்கியது,அதில் தப்பி பிழைத்தோர் வெறும் ஒன்பது பேர்
அவர்களுக்கு வெகு நேரம் கழித்துதான் நினைவு திரும்பியது அதில் ஒருவர் பெண்மணி, அதில் முன்று பேரின் நிலைமை மோசமாக இருந்தது அவர்களுக்கு எங்கு இருக்கிறோம் என்பது தெரியவில்லை மெதுவாக அவர்கள் சகச நிலைக்கு திரும்பினர்

(ஆனால் இவர்கள் இருப்பது ஒரு புதிய கிரகம் அந்த புதிய கிரகத்தில் காற்று தண்ணிர் எல்லாம் இருக்குமா என்று கேட்டால் எனக்கு இப்போது தெரியாது பொறுத்திருந்து பாருங்கள், இந்த நேரத்தில் ஒன்றை நான் நினைவு கூர விரும்புகிறேன் ரயில் வண்டி போய்கொண்டிருக்கிறது திடிரென்று ஒரு விபத்து ஏற்படுகிறது அது முன்பக்கமாக இருக்கும்போது பின்னால்னுள்ள பெட்டிகள் முன்னோக்கிதானே நகரும் அதுபோலத்தான் சூரிய குடும்பத்திலுள்ள கோள்கள் அனைத்தும் நீல் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன இவை அனைத்தும் ஒரு குறிப்பட்ட விசையுடந்தான் சுற்றி வருகின்றன அப்படியானால் பூமி வெடித்து சிதறும்போது அந்த இடத்திற்கு வேறு ஒரு கோள் வரும்தானே?)

இனி பயணிகளை பார்ப்போம்

ஒருவர் சொல்கிறார் அப்பா முருகா என்ன காப்பாத்துன உனக்கு 108 தேங்காய் உடைக்குறேண்டா என்று சொல்கிறார்,இன்னொருவர் மண்டியிட்டு தொழுகை செய்கிறார் இன்னொருவர் எல்லாம் வல்ல இயேசு பிரானே எல்லாம் உன் கருணை என்று சொல்கிறார் இப்படி அவரவர் வணங்குகிறார்கள்

ஒருவர் கேட்கிறார் எல்லாம் சரிதான் உங்களுக்கு தெரியுமா நாம் எங்கு இருக்கிறோமென்று என்று கேட்கிறார்,

அப்பா என்னோட நிலம் எல்லாம் போச்சா?
இன்னொருவர் ஐயோ என்னோட
பங்களா கார் எல்லாம் போச்சா?உங்களை திருத்தவே முடியாது திருந்தவும் விட மாட்டிர்கள்,

ஒருவர் சொல்கிறார் எங்க முருகபெருமாள் மட்டும் இல்லனா இந்நேரம் நம்மளும் செத்துப்போயிருப்போம் என்று சொல்கிறார்

இன்னொருவர் இல்ல எல்லாம் வல்ல இயேசு பிரானின் கருணைதான் நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று சொல்கிறார்
இன்னொருவர் இல்லை இல்லை எல்லாம் அல்லாவின் செயல் என்று சொல்கிறார்
இவர்கள் வாக்குவாதத்தில் அந்த முன்று பேரை இவர்கள் கவனிக்கவில்லை
அவர்கள் இறந்து விட்டார்கள்
நிறுத்துங்கள் உங்க மூவரால் முன்று பேர் இறந்தது விட்டார்கள்
அப்போதுதான் மற்றவர்கள் யோசிக்கின்றனர்,

எல்லாரும் ஒருநிமிடம் கவனிங்க இப்ப நாம இருக்கிறது ஒரு புது கிரகம் இங்க என்ன இருக்குதுன்னே தெரியாது ஆனால் நம்மால் உயிர் வாழ முடிகிறது,
அவர் சொல்கிறார் எல்லாரும் நம்மை நாமே அறிமுக படுத்திக்கலாம் என்று சொல்கிறார் என்னோட பெயர் சுரேஷ் உங்க பெயர சொல்லுங்க என்று கேட்கிறார் ஒருவர் நான் இஸ்மாயில், நான் அந்தோணி, நான் குமரன்,நான் புனிதா,நான் பிரணாப் ,


அவர்களுடைய புதிய பயணம் புதிய கோளில் தொடர்கிறது..


என்னுடைய கேள்வி?

முதலில் அவர்கள் அங்கு எப்படி வாழப்போகிறார்கள்?

இரண்டாவது கேள்வி அங்கு யார் ஆதாம் யார் ஏவாள்?யார் சிவன் யார் பார்வதி,யார் அல்லா யார்?

இவர்கள் தான் புதிய மனிதர்களா?
இவர்கள் தான் பூமியில் வாழ்ந்து சென்றவர்களா?

இவைகள் அனைத்திற்கும் விடை என்ன?

விடை
என்னவாக இருக்கும்?

முதல் இரண்டு நாட்கள் அவர்களுக்கு உணவைப்பற்றி கவலை ஏற்படவில்லை காரணம் விமானத்தில் உள்ள உணவு வகைகள் போதுமானதாக இருந்தது,

முன்றாவது
நாள் என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் யோசிக்க ஆரம்பித்தனர்

பூமியில் எப்படி வாழ்ந்தான்

எத்தனை வகையான உணவு வகைகள்
ஆனால் இன்று அவனுக்கு கிடைத்ததை சாப்பிடவேண்டிய கட்டாயம்


தேடினார்கள்
அவர்கள் உணவை மட்டுமா?அவர்களுக்கு தேவையானா அனைத்தையுமே ஆம் என்ன தேவை அவர்களுக்கு
உன்ன உணவு, இருக்க இடம், இதுதான் இப்போதைய தேவை


இந்த புதிய மனிதர்கள் பஞ்ச பூதங்களாக இருந்து வாழப்போகிறார்களா? அல்லது பஞ்ச பாண்டவர்களாக மாறி தங்களை தாங்களே அழித்துக் கொள்ளப்போகிறர்களா?

அவர்களில் யார் தாமஸ் ஆல்வா எடிசன்? யார் ரைட் சகோதரர்கள்?
யார் சாக்ரடிஸ்?,யார் மகாத்மாகாந்தி? யார் விவேகானந்தர்?

பூமியில் வாழ்ந்த வாழ்க்கையைப் பார்ப்போம்!

பூமியில் வாழ்ந்த மனிதன் எப்படிப்பட்டவன்?
ஆறறிவு படைத்தவன் அவன்தான் பிரித்தான் உருவத்தை வைத்து நிறத்தை வைத்து ஆம்!,இனம்,மதம்,நிறம் ஒரு உருவத்திற்கு அவன் சொன்ன முதல் வித்தியாசம் அது மட்டுமா? இனத்தைப் பலவாராக பிரித்தான்,மதத்தையும் பலவாறாக பிரித்தான் அதற்கு உருவத்தையும் அவனே
கொடுத்தான்,அதற்கு கோவிலையும் கட்டினான்,பல இலட்சங்களை செலவு செய்தான்,அனைத்தையும் அவனே எடுத்துக் கொண்டான் இல்லாதொரு ஏதாவது கொடுத்தானா?

இந்து மதத்தை இரண்டாக பிரித்து சைவம் சமணம் என்றான்,கிருத்துவ மதத்தை இயே
சுநாதர் அன்னை மாதா என்று சொன்னான்

இன வெறியாலும் மதவெறியாலும் அவன் செய்த கொலைகள் ஏராளம்
மதவெறிக்கு கோத்ரா இரயில் எரிப்பு போதாதா?
இனவெறிக்கு குர்தின
மக்களை கொன்றது போதாதா?

பெண்களை மதித்தானா? பெண்களை கடவுளுக்கு சமமென்றான் பிறகு காட்சிப்பொருளாக மாற்றினான்,அது மட்டுமா காமத்திற்கும் அல்லவா பயன்படுத்தினான்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...

இப்படி வாழ்ந்த மனிதன் புதிய கிரகத்தில் மட்டும் எப்படி வாழ்வான்?
அவர்கள் புதிய கிரகத்திற்குதான் புதிய மனிதர்கள் உண்மையில் மனித உருவத்தில் இருக்கும் விலங்கு.

இதைப்பற்றிய உங்களது கருத்துக்களை சொல்ல விரும்பினால் சொல்லலாம்.

tsk1276@gmail.com









Monday, April 27, 2009

போராட்டம் எதற்கு?


தண்ணிருக்காக
குழாய்ச் சண்டையும்
அடிபம்பில் அடிதடியும்
நடை பெற்றுக்கொண்டிருக்கும்
நமதூரில் (தமிழகத்தில்)

அதே தண்ணிருக்காக
அண்டை மாநிலங்களை
நாடுவது நியாயமோ?

கிடைத்த நீரையே
அண்டைவீட்டாருடன்
பகிர்ந்து கொள்ளாதபோது

கிடைக்காத் நீருக்காக
அண்டை மாநிலங்களிடம்
போராடுவது எதற்கு
?

இதுதான் அரசியலோ?
இதுதான் ஜனநாயகமோ?
இதுதான் Unity In Diversity யோ?

இதுதான் மனித நேயமோ?

Inak:-)


இளமை ஏற்கட்டும் தலைமை!



இளமை ஏற்கட்டும் தலைமை!


இது நான் இரண்டாவதாக எழுதிய ஒன்று, அதே நேரத்தில் நான் கலந்துகொண்ட முதல் கவிதைப்போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசை பெற்றுத்தந்த்து,


இதில் இன்னொரு முக்கியமான விஷயம் அன்றைய தேதி ஆம் Nov 15 1999
நான் முதன்முதலில் எனது Baby My Heart அவர்கள் வீட்டிற்குச்சென்றதும் Nov
15 ஆனால் வருடம் வேறு,

இந்த கவிதையை நான் எழுதியதை என்னால் மறக்கமுடியாது காரணம் அப்போது எனக்கு எழுதவே
தெரியாது ஆனால் கொடுத்திருந்த தலைப்பு என்னை எழுத தூண்டியது,

ஒரு வாரத்திற்கு முன்பே தலைப்பை கொடுத்தார்கள் அன்றிலிருந்து எனக்குள் ஒரு வெறி வந்தது எப்படியாவது எழுதவேண்டுமென்று, ஆனால் எப்படி எழுதவேண்டுமென தெரியவில்லை,

நாட்கள் நெருங்கநெருங்க வெறி அதிகமானது அதே சமயத்தில் எப்படி எழுத்ப்போகிரோமென ஒரு பயமும் கூடவே வந்தது,மாலை 03:30
மணிக்கு ஆரம்பிக்கப்போகிறது போட்டி, என்ன செய்வதென்று
தெரியவில்லை எனக்கு அன்று மதிய உணவு இடைவேளைக்குப்பிறகு Tensen இன்னும் அதிகமாகியது இன்னும் மூன்று மணிநேரமே உள்ளது என்னசெய்வதென்று தெரியவில்லை, இடையில் ஒரு பிரிவு ஆசிரியர் வந்துவிட்டார் இன்னும் Tensen அதிகமாகியது எப்போது அவர் போவார் என காத்திருந்தேன்,

ஒருவழியாக போய்விட்டார் எடுத்தேன் paper பேனாவை எழுத ஆரம்பித்ததுதான் தெரியும் எனக்கு அது என்னவென்று நீங்களே படித்துப்பாருங்கள்!




இளமை ஏற்கட்டும் தலைமை!
இதுதான் நீங்கள் கொடுத்திருக்கும்
தலைப்போ?

வெறும் தலைப்பை கொடுத்துவிட்டு
கவிதை எழுதச்சொன்னால்
எப்படி முடியும்?

கவிதையைப்பற்றி
வழிமுறைகள் சொன்னிர்களா?
அல்லது கவிதை எழுத

பாடம்தான் எடுத்திர்களா?

நான் ஒன்று கேட்கிறேன்
எந்தவித வழிமுறைகளையும்
சொல்லாமல்

இளமை ஏற்கட்டும் தலைமை
என்ற தலைப்பை மட்டும்
கொடுத்தால் எப்படி ஏற்பது தலைமை?

இளமை தலைமை ஏற்கவேண்டுமானால்
ஒரு வழிமுறை வேண்டும்
அந்த வழிமுறையை சொல்ல
ஒரு சிறந்த வழிகாட்டி வேண்டும்!

அந்த ஒரு சிறந்த வழிகாட்டி
இல்லாமல் எப்படி எதற்கு
யார் முன்னிலையில் தலைமை ஏற்பது?

கல்வியில் முதலிடம் பெரும்
மாணவனுக்கு வழிகாட்டி
ஒரு ஆசிரியர்!

ஒரு விளையாட்டு வீரனுக்கு
உடற்பயிற்சி ஆசிரியர்!

கப்பலுக்கு வழிகாட்டி
ஒரு காந்த்மாணி!

வானவூர்திக்கு ரேடார்
கூடவே ஒரு கட்டுப்பாட்டறை!

இதுபோல் ஒவ்வொன்றிற்கும்
ஒரு வழிகாட்டி இருக்கும் போது
எனது இளமைக்கு மட்டும்
ஏன் இல்லை வழிகாட்டி?

வழிகாட்டி இல்லாமல்
எப்படி தலைமை ஏற்பது?


அப்படியே தலைமை ஏற்றாலும்
இந்த முதியோர் சமுதாயம்தான்
சும்மா இருக்குமா?

எந்தவித வழிகாட்டியும் இல்லாமல்
இளமை ஏற்கட்டும் தலைமை
என்று சொல்லிவிட்டிர்கள்

எதற்கு ஏற்பது?
எப்படி ஏற்பது?

சொல்லுங்கள் எதற்கு
தலைமை ஏற்பது?

எனக்கு நானே வழிகாட்டியாக

இருந்து எனது இளைய
சமுதாயத்தை நல்வழிப்படுத்த
நான் ஏற்கிறேன் தலைமை!

எனது இளமை தலைமை
ஏற்றால் உலகையே
பசுமையாக மாற்றுவேன்!

ஆனால் நான் ஒரு சிறந்த
வழிகாட்டியை எதிர்ப்பார்த்து

இறுதியில் நானே வழிகாட்டியாக
மாற நினைக்கும்போது

என்னிடம் இல்லை இளமை

இருந்தது முதுமை மட்டுமே!


இந்த கவிதை முரண்பாடான கவிதை என தேர்வு குழுவால் தேர்வுசெய்யப்பட்டு
எனக்கு இரண்டாம் பரிசை பெற்றுத்தந்தது

திரு.லேனா தமிழ்வாணன் அவர்களிடம் இதற்கான பரிசைப்பெற்றேன்.

Inak:-)












Sunday, April 26, 2009

காலம் சொல்லும்!



வணக்கம்!
இதற்கு முன் ஒரு சிறுகதையை படித்திருப்பிர்கள் அது உண்மையிலே நடந்த ஒன்று அதை படித்த ஒரு நண்பர் கதை நன்றாக இருக்கிறது அதை வெளியிடலாமே என்று எனக்கு Mail பன்னியிருந்தார் நான் திரும்ப சொன்னேன் அது நடந்தது என்று, இதுவும் ஒரு உண்மை சம்பவம்தான்,இதையும் யாரிடமும் சொல்லக்கூடாதுதான் ஆனால் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை அதனால் சொல்கிறேன்,

என்றைக்குமில்லாமல் இன்று எனது அப்பாவும் எனது தம்பியும் எனை ஒரு இடத்திற்கு போகவேண்டும் கிளம்பி ரெடியா இரு என்று சொன்னார்கள்,பொதுவாக எனக்கு என்வீட்டாருடன் எங்கும் போக பிடிக்காது,
நான் பேசாமல் இருந்தேன் சிறிதுநேரம் கழித்து எனது தம்பி சிஇக்கிஇரம் கிளம்பு என்று சொன்னான் நான் வேறு வழியில்லாமல் கிளம்பினேன்,

மெயின்ரோட்டிற்கு வந்தவுடன் ஒரு Call Taxi பிடித்து சென்றோம் எனக்கு எங்கு போகிறோம் என்று தெரியவில்லை ஒரு 45 நிமிட பயணதத்திற்க்குப்பிறகு
ஒரு இடத்தில் வண்டி நின்றது,அந்த இடம் chennai யில் வசதிபடைத்தவர்கள் வசிக்குமிடம்,ஒரு வீ ட்டிர்க்குள் சென்றோம்,

வீ டு மிகவும் அழகாகவே இருந்தது Calling Belல் யை அடித்தவுடன் ஒருசிலநிமிடத்தில் கதவு திறக்கப்பட்டது கதவை திறந்தது ஒரு பெண்மணி,வாங்க என்று அன்புடன் எங்களை வரவேற்றார், அந்த வீட்டின் Hallலில் அமர்ந்தோம்,சிறிதுநேரத்தில் அதே பெண்மணி cooldrinks கொண்டுவந்து கொடுத்தார்கள்,எனக்கு ஒன்றுமே புரியவில்லை, எதற்கு நம்மை இங்கு அழைத்துவந்திருக்கிறார்கள்? இங்கு இருப்பவர் யார்?என்று நான் பலவாறு யோசித்துகொண்டிருக்கையில் வாங்க எப்பவந்திங்க என்று கேட்கும் ஒரு குரல் காதில் விழவே நான் சகஜநிலைக்கு திரும்பினேன்,

எனது தந்தை அவரிடம் இவன்தான் பெரியவன்,அவன் சின்னவன் என்று எங்களை அறிமுகம் செய்துவைத்தார்,நானும் Hello சார் என்றேன்,பிறகு அவர் எனது தந்தையின் அலுவல்களைப்ப்றி விசாரித்தார்,பிறகு என்னிடம் நீங்க Computer Service ப்ன்னுவீங்கலாமே என்று கேட்டார் நான் ஆம் என்று சொன்னேன் உள்ள ஒரு Computer இருக்கு அது என்ன Problem ன்னு பாக்கணும் உள்ள போய் பாக்கலாமா என்று கேட்டார்,

நான் சார் Tools எதுவும் கொண்டு வரல என்று சொன்னேன்,அவரோ முதல்ல என்னன்னு பாருங்க இன்னொருமுறை வரும்போது அப்ப கொண்டுவாங்கன்னு சொன்னார் நானும் சரி சார் போய் பாக்கலாம் என்று சொன்னேன்,

அவர் அழைத்துச்சென்ற அறையில் ஒரு Office Table, ஒருபுறம் சாய்வு நாற்காலி மறுபுறம் இரண்டு சாதாரண நாற்காலிகள் இருந்தது,சாய்வு நாற்காலி மேற்கு திசை நோக்கியும், மற்ற இரண்டு நாற்காலிகள் கிழக்கு திசை நோக்கியும் போடப்பட்டிருந்தது அந்த Tableமீது அழகான Table Cloth அதன்மீது Computer, Pen Stand,

மற்றும் சிலவை இருந்த்து,அந்த அறையில் Fan இல்லை Ac அதுவும் window Ac போடப்பட்டிருந்தது,

நான் சார் Computer On செய்யனும் Switch எங்க இருக்குன்னு கேட்டேன் அவர் அதோ இருக்குபாருப்பா என்று switchயை காண்பித்தார் நான் Computer On செய்து பார்த்துக்கொண்டிருந்தேன்,

அவர் வேலையெல்லாம் எப்படி போகுது என்று கேட்டார் நல்லா போகுது சார் என்றேன், அப்பா சொன்னாரு உங்களுக்கு பொண்ணு பாத்துகிட்டு இருக்கர்ர்னு அப்படியான்னு கேட்டார் ஆம் என்று சொன்னேன்,
நீங்க யாரையாவது Love பண்ணுரிங்கலான்னு கேட்டார்?
நான் No Sir என்றேன், அவர் யாரும் கிடைக்கலையா இல்ல உங்களுக்கு அதுல விருப்பமில்லையா என்று கேட்டார்,எப்படி சொல்லுறதுன்னு தெரியல சார் என்றேன்,சார் System நல்லாதான் இருக்கு சார் என்றேன் அவர் அது எனக்கு தெரியுமென்று சொன்னார்,எனக்கு ஒன்றுமே புரியவில்லை,


நீங்கதான சார் சொன்னிங்க என்றேன்,அதுஇருக்கட்டும் உங்க அப்பா என்ன சொல்லி இங்க உங்கள கூப்பிட்டு வந்தார் என்று கேட்டார் நான் ஒன்னும் சொல்லல சார் என்றேன்,

சரி பரவாயில்ல நான் ஒரு மனநல மருத்துவர் என்று அவரை அவரே அறிமுகம் செய்தார் எனக்கு ஒன்றுமே புரியவில்லை நான் சொன்னேன் சார் நான் நல்லாத்தான் இருக்கேன் எனக்கு ஒன்னுமில்லை சார் என்றேன் அவர் உலகத்துல ஒன்றுமில்லாதவர்கள் யாரும்கிடையாது எல்லாருக்கும் எதாவது ஒருவிதத்தில் ஒரு பிரச்சனை இருக்கும் உன் பிரச்சனை என்ன என்று கேட்டார் நான் திருமா சொன்னேன் சார் நான் நல்லாத்தான் இருக்கேன் என்றேன்,

உன்வயசு என்ன உன் வயசுக்கேத்தமாதிரியா உன் உடம்பு இருக்குன்னு கேட்டார் நான் சொன்னேன் சார் நான் எனக்கு சாப்பாட்டில் விருப்பம் கிடையாது என்று சொன்னேன் அவர் ஏன் சாப்பாட்டுல விருப்பமில்லைன்னு கேட்டார்,நான் சின்னவயசுலேருந்தே அவளவாக சாப்பிடமாட்டேன் என்று சொன்னேன் அவர் அதான் என்ன காரணமென்று கேட்டார் சார் காரணமெல்லாம் ஒன்றுமில்லை என்று சொன்னேன்

சரி வீட்டுல யார்கிட்டயும் சரியா பேசுரதுகிடையாதாமே ஏன்?
என்று கேட்டார் சார் நான் எப்பவுமே அவ்வளவாக யார்கிட்டயும் பேசமாட்டேன் என்றேன்,அதற்கு என்ன காரணம் என்று கேட்டார் நான் சொன்னேன் சார் நான் ரொம்ப அமைதியான டைப் என்று சொன்னேன்,

சரி கொஞ்சநாளாகவே எல்லார்கிட்டயும் எரிஞ்சு விலுரயாமே அதுக்கு என்ன காரணம் என்று கேட்டார்,என்னால் அதற்குமேல் பொறுமையாக இருக்கமுடியவில்லை சார் உங்களுக்கு என்னோட பிரச்சனை என்னன்னு தெரியனும் அவலவுதானே சார் என்று சற்று கோபமாகவே சொன்னேன் அவர் அப்படியில்லப்பா என்றார்,

நான் சொன்னேன் சார் எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது அப்படியே அத உங்ககிட்ட சொன்ன்னாலும் உங்களால அத திர்க்கமுடியாது போதுமா சார் என்று கோபமாகவே கடிந்தேன்,

உலகத்துல எதுவேமே முடியாத்துகிடையாதுப்பா என்று சொன்னார் நான் அது எனக்கும் தெரியும் சார் என்று சொன்னேன் "Don't Tell Impossible Without Taking Efforts,Try First,Do Best,Learn Next,Win last". சார் இத சொன்னதே நான்தான் அதனால எனக்கு தெரியும் சார் நான் நல்லாத்தான் இருக்கேன் என்ன தயவு செய்து விட்டுடுங்க என்று சொன்னேன்


சரி எதோ பிரச்சனை என்று சொன்னயே அது என்னனு சொல்லமுடியுமா என்று கேட்டார் சார் அது என்னோட தனிப்பட்ட விசயம் அத சொல்லமுடியாது என்று சொன்னேன் ,அவர் புரியுது இருந்தாலும் என்னால முடிஞ்சா நான் அத Solve பண்ணுவேன் என்று சொன்னார் நான் சொன்னேன் சார் அத யாராலையும் Solve பண்ணமுடியாது ஏன்னா அது எனக்கும் என் Baby க்கும் உள்ள பிரச்சனை Pls தயவுசெய்து அதபத்திகேக்காதிங்க என்று சொன்னேன் அவர் விடுவதாக இல்லை

எனக்கது சொல்லுப்பா நான் Solve பண்ணுறேன் என்று மீண்டும் கேட்டார் சார் அவங்க என்னோட Baby My Heart அவங்கதான் எனக்கு எல்லாமே, அவங்களுக்குப்பிறகுதான் மத்தவுங்க இப்ப என்கூட அவங்க பேசுறதுகிடையாது அதுக்கு நான் தான் காரணம் அதனால என்னால முடியல அதான் வேற ஒன்றும்கிடையாது என்று சொன்னேன்,

நான் பேசட்டுமா என்று கேட்டார் நான் சொன்னேன் சார் "நம்பிக்கையை பிறர் தரமுடியாது அது அகத்திலேயே வரவேண்டும்" இது ஒரு பொன்மொழி இதுபோல அன்பையும் பாசத்தையும் நல்ல நடப்பையும் மத்தவுங்க சொல்லி ஒருத்தருக்கு வரகூடாது அது தன்னால் வரவேண்டும் ,அதனால இப்போதைக்கு இதை காலம்தான் முடிவு செய்யும் அதுவரை நான் பொறுத்திருப்பேன் தயவு செய்து இத எங்க வீட்டுல சொல்லிடாதிங்க, மத்தபடி எனக்கு ஒன்றுமில்லை என்று சொன்னேன் அவர் இல்லப்பா என்று சொல்வதற்குள் சார் விட்டுடுங்க அவளவுதான் என்றேன்,

நான் எந்த அளவிற்கு என் Baby மீது பாசம் வைத்திருக்கிறேன் என்று தெரியவேண்டுமானால் pls dont ask me, u see my blog sir என்று சொல்லி நான் வெளியே வந்துவிட்டேன்.

அதுதான் உண்மை,ஒருவருக்கு ஒருவர் மீது பாசம் வரவேண்டுமானால் அது தானாக வரவேண்டுமே தவிர மற்றவர் சொல்லி வரக்கூடாது,அப்படி மற்றவர் சொல்லி வரும் அன்பும், பாசமும் நிலைதுநிற்க்காது

எனக்கு நம்பிக்கை இருக்கிறது எனது Baby My Heart என்னுடன் பேசுவார்க்லென்று அதை காலம்தான் முடிவு செய்யும்!

"பொறுத்தார் பூமியாழ்வார்" எனும் பழமொழிககேர்ற மாதிரி நானும் பொறுத்திருப்பேன்!

Inak:-)