Thursday, March 26, 2009

காணவில்லை !

கதிரவனின் மிதவெப்பத்தை
காணவில்லை !

நிலவிடம் குளுமையை
காணவில்லை !

மேகத்திடம் மழையை
காணவில்லை !

அரசனிடம் ஆட்சித்திறமையை
காணவில்லை!

அதிகாரியிடம் அன்பை
காணவில்லை!

காவல்துறையிடம் கடமையை
காணவில்லை!

சட்டத்திடம் குருட்டுத்தன்மையை
காணவில்லை!

மக்களிடம் ஒற்றுமையை
காணவில்லை!

காணமல் போனது
இவைகள்மட்டுமல்ல
மனிதனின் குணமும்தான்!

எந்தன் மனமும்தான்!






No comments: