Sunday, March 29, 2009

வேண்டும்!

மாசற்ற நிலம் வேண்டும்!
கதிரவன் சுடச்சுட அடித்தாலும்
வற்றாத நீர்நிலைகள் வேண்டும்!

குளிர்ந்த காற்று வீசாவிட்டாலும்
மழையை தரக்கூடிய கருமேகங்கள்
வேண்டும்!

மழை தன்னை பார்க்காவிட்டாலும்
பசுமை மாறாத மரங்கள் வேண்டும்
மனிதன் கைபடாத பொருள் வேண்டும்
பணத்தை பார்க்காத கண்கள் வேண்டும்!

அன்பு ஒன்றே போதுமென சொல்லும்
உள்ளங்கள் வேண்டும்
சுயநலமற்ற மக்கள் வேண்டும்!

இவைகள் கிடைக்கவிட்டாலும்
உண்மையான பண்பை மறவாத
மனிதன் வேண்டும்!

Inahk:-)

No comments: