Monday, March 30, 2009

குற்றவாளி!

தெரியாமல் செய்வது குற்றம்!
தெரிந்து செய்தால் அது தவறு!

இப்புவியில் மனிதனாக பிறப்பது
தவறென்று தெரிந்தும் பிறந்தது
குற்றம்தானே ஆனால் இதை
நான் செய்யவில்லை!

வள்ர்சிஎன்பது தானாக
இருக்கவேண்டும் அதை நானாக
வளர்த்துக்கொண்டது குற்றம்தானே!

அடித்தால் திரும்ப அடிக்கவேண்டுமென
தெரிந்தும் அடி வாங்கியது குற்றம்தானே!

பொய் சொல்லவேண்டிய இடத்தில்
உண்மை பேசியது குற்றம்தானே!

இப்புவியில் மனிதனை மனிதனாக
மதிக்கக்கூடாதென தெரிந்தும்
மதித்து நடந்தது குற்றம்தானே!

இவ்வளவு குற்றங்களை
புரிந்த நான் பயங்கர
குற்றவாளி தானே !

Inak:-)

No comments: