ஒரு மனிதன் எப்போது
கவிஞனாகிறான்?
எப்போது ஞானியாகிறான் ?
காதலிக்கும்போது
கவிஞனாகிறான்! அதே காதல்
கசக்கும்போது ஞானியாகிறான்!
அப்படியானால்
இடைப்பட்டவர்கள்?
மனைவியை காதலிப்பவன்
கவிஞனாகிறான்!
மனித இனத்தை காதலிப்பவன்
ஞானியாகிறான்!
அப்படியானால்
மனமுடிகாதவர்கள்?
அறிவைக்காதலிப்பவன்
ஆசிரியனாகிறான்!
அதே அறிவைகாயப்படுதுபவன்
ஆண்டியாகிறான்!
அப்படியானால்
மற்றவர்கள் ?
செய்யும் தொழிலை காதலிப்பவன்
முதலாளிகிறான்!
அதே தொழிலை தொலைத்தவன்
தொலைந்தே போகிறான்!
அப்படியானால்
இன்னுமற்றவர்கள்?
நட்பை காதலிப்பவன்
தன்னை தூக்கிச்செல்ல
நான்குபேரை பெறுகிறான்!
அதே நட்பை தொலைத்தவன்
கிடத்தயாருமில்லாமல்
அனாதையாகிறான்!
Inahk:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment