Wednesday, May 3, 2023

மாடு வளர்க்குரதுன்னா அவ்வளவு ஈசியாபோச்சா

 

மாடு வளர்க்குரதுன்னா அவ்வளவு ஈசியாபோச்சா உங்களுக்கு

என்னால கேப்டன் மாதிரி புள்ளிவிவரமா சொல்லத்தெரியாது எளிமையா சொல்றேன் கேட்டுக்கோ

அது என்ன பையன் படிச்சுமுடிச்சு வேலைகிடைக்கலனா எல்லா அப்பாமார்களும் சொல்றீங்க உன்ன படிக்க வைச்சதுக்கு பதிலா நாலு மாடு வாங்கி மேய்க்க விட்டுருக்க்கலாம்ன்னு

அதே படிச்சு வேலைக்கு போறவன் சம்பளம் கம்மியா வாங்கினா இந்த கம்பெனில வேலை செய்றதுக்கு பதிலா ஒரு நாலு மாடு வாங்கி மேய்ச்சுடலாம்ன்னு சொல்றான்

இது என்ன வியாபரம்ன்னு நினைச்சிங்களா?சிட்டியில மாடு வளர்க்குறேன்னு தெருவுக்கு நாலு பேரு மாட்டு பால கறந்துட்டு பாவம் அதுக்கு தீவனம் இல்லாம தெருவுல இருக்குற குப்பைய மேயவிடுறாங்களே அது இல்ல மாடு வளர்க்குறது

மாடு வளர்க்குதுன்னா மொதல்ல குறைஞ்சது ஒரு 25 சென்ட் நிலமாவது தண்ணீர் வாதியுடன் இருக்கணும்

மாட்டு கொட்டகை தரையில் இருந்து குறைந்தது மூனடி மேடா இருக்கணும்

கொட்டகை கிழக்கு மேற்காக கட்டனும்

மாடு வளர்க்குரதுக்கு முன்னாடி அதுக்கு தேவையான பசுந்தீவனம் தயார் நிலையில் இருக்கணும்

ஒரு கறவை மாடு இன்னைக்கு குறைந்தது 50,000 ஒரு மாடு வைச்சுருந்தா பத்தாது குறைந்தது நாலு மாடாவது வேணும் மாடு வாங்க குறைந்தது கையில் ஒரு லச்சமாவது காசு இருக்கணும்

மாடு வாங்க கொட்டகை அமைக்க இதுக்கு குறைந்தது இரண்டு முதல் மூனு லச்சம் செலவாகும்

அப்படியே மாடு வாங்கினாலும் மாடு வாங்கின உடனேயே கன்று போட்டு பால் கொடுக்காது

அது கன்று போடுகிற வரைக்கும் அதற்கு தீவனம் மேச்சல் இப்படி எல்லாத்தையும் செய்யணும்

கன்று போட்டது முதல் மாட்டின் தரத்தை பொறுத்து வருடத்திற்கு குறைந்தது 6-8 மாதங்கள் வரை பால் கொடுக்கும்

ஒரு லிட்டர் பாலின் விலை பால் கொள்முதல் செய்பவர்களை பொறுத்து வேறுபடும் குறைந்தது ஒரு லிட்டர் பால் 28 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் கூட ஒரு மாடு சராசரியாக காலை 7-9 லிட்டரும் மாலை 5-7 லிட்டரும் பால் கொடுக்கும் இதன் ஒரு நாள் சராசரி என்று பார்த்தால் 13 லிட்டர் ஒரு லிட்டர் பாலின் விலை சராசயாக 25 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் ஒரு நாளைக்கு 325 ரூபாய் ஒரு மாட்டின் மூலம் கிடைக்கும், நான்கு மாடுகள் என்றால் ஒரு நாளைக்கு சராசரியாக 1,300 ரூபாய் ஒரு மாதத்திற்கு 39,000 ரூபாய்

இதுல நாலு மாடுகளும் ஒரே மாதிரி பால் கொடுக்குமான்னா இல்ல வேறுபடும்

இது பாலின் மூலம் கிடைக்கும் பணம் இது சும்மா கிடைச்சுடாது

காலையில சீக்கிரமா எழுந்திருக்கணும் மாட்டு கொட்டகையை சுத்தம் செய்யணும் சாணிய எடுத்து ஒரே இடத்தில் போடணும்

மாட்டுக்கு தேவையான பசுந்தீவனம் கொடுக்கணும் பசுந்தீவனம் இடம் இருந்தால் அதில் விளைய வைத்து கொடுக்கலாம்

அது மட்டும் கொடுத்தா போதாது வைக்கோல் வாங்கனும் ஒரு வைக்கோல் கட்டு 250 ரூபாய்  இன்னைக்கு விலை,வாங்கினா ஒன்னு இரண்டு எல்லாம் வாங்க முடியாது ஒரு டிராக்டர் கட்டு வங்கனும் அதுக்கு குறைந்தது 15,000-20,000 ரூபாய்

அடுத்து அடர் தீவனம் கொடுக்கணும் ஒரு மூட்டை குறைந்தது 1200-2000 வரை விக்குது

இதெல்லாம் போக காலை 9:00-10:00 மணிக்குள்ள மாட்ட மேய்க்க கூட்டிட்டு போகணும்

சும்மா பேருக்கு மேய்க்க கூடாது மாடு நல்லா இரையை எடுகுதான்னு பாக்கணும் வெயில நாம பாத்தா மாடு சரியா சாப்பிடாது

மழை காலத்தில் சரியாக மேய்க்க முடியாது அப்படி பட்ட நாட்களில் பசுந்தீவனும் அடர் தீவனமும் கையில் ஸ்டாக் வைத்திருக்க வேண்டும்

மதியம் மேய்ச்சலில் இருந்து கூட்டி வந்து நல்ல நிழலில் கட்டிவைத்து நிறைய தண்ணீர் குடிக்க கொடுக்கணும்

காலை மாலை பால் காரர் சரியாக பால கரக்குரான்னு பாக்கணும்

எல்லாத்துக்கும் மேல இரவு மாடு அசை போடுதாணு பாக்கணும்

அதுக்கு உடல் நலம் ரொம்ப முக்கியம் சாதாரண சளி பிடித்திருந்தாலும் கால்நடை மருத்துவரை அழைத்துவந்து காட்டி அதுக்கு முறையா மருந்து கொடுக்கணும்

நமக்கு உடம்பு சரியில்லனா நமக்கு தெரியும் நாம டாக்டர பாக்க போவோம் ஆனா இவைகளுக்கு சொல்லத்தெரியாது நாமதான் சரியா கவனித்து மருத்துவம் மருத்துவரின் ஆலோசனை படி முறையா செய்யணும்

சில நேரங்களில் கன்று ஈனும் நேரத்தில் மாடு இறந்துவிடும் அது எவ்வளவு பெரிய துயரம் தெரியுமா?

ஒரு மாடு வைச்சிருந்தாலும் சரி நாலு மாடு வைச்சிருந்தாலும் சரி ஒரு நாளைக்கு குறைந்தது காலை இரண்டு மணி நேரமும் மாலை இரண்டு மணி நேரமும் நாம் நேரிடையாக அவைகளுடன் நேரம் செலவிடனும்

சுருக்கமா சொல்லனும்னா மாடுகள் வியசாயிகளின் வாழ்வாதாரம்

மாடுகளை அவர்களின் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறார்கள்

நீ நினைக்குறமாதிரி வெறும் பாலுக்காக யாரும் வளர்க்கல

.இனி மே யாராவது பையன படிக்க வைச்சதுக்கு பதிலா நாலு மாடு வாங்கி விட்டிருக்கலாம்ன்னு சொன்னிங்க நடக்குறதே வேற 

மாடு வளர்க்குறது ஒன்னும் அவ்வளவு ஈசி இல்ல

உன்கிட்ட சொன்னது கொஞ்சம்தான் நீ ஒரு மாடு வாங்கி மேச்சு பாரு அப்ப தெரியும் உனக்கு மாடு வளர்க்குரதுல இவ்வளவு கஷ்டம் இருக்குன்னு

சும்மா கோட்டு சூட்டு போட்டுகிட்டு ஏசில உக்காந்துகிட்டு சம்பளம் வாங்குறதுள்ள புரியுதா.


No comments: