வெளியேற்றுங்கள்!
கடந்த இரண்டு வருடமாக அதற்கு மேலாகவும் ஒரு பிரிவினர்
சொல்லிக்கொண்டிருப்பது
முதலில் ஒரு விசயத்தை நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன்
எனக்கு மதம்,சாக்கடை இதில் உடன்பாடில்லை
இட ஒதுக்கீடு முறை கொண்டுவந்ததன் நோக்கம் மற்றவரிடமிருந்து
வேறுபடுத்தவோ பிரிப்பதற்க்கோ அல்ல பல
நூற்றாண்டாய் ஒடுக்கப்பட்டும், பல்வேறு வாய்ப்புகள்
மறுக்கப்பட்டும் இருந்தவர்களுக்கு
கல்வி பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பை பெற்று அவர்களும் முன்னேற வேண்டும் என்கிற
நோக்கில்தான் உருவாக்கப்பட்டது
திரும்ப 1928 ல் கடும் எதிர்ப்புக்கு
நடுவே வகுப்புரிமை ஆணை நடைமுறைபடுத்தப்பட்டது
1950ல் அரசியல் அமைப்பு நடைமுறைப்படுத்தும் போது, பல நூற்றாண்டாய் ஒடுக்கப்பட்டும், பல்வேறு வாய்ப்புகள் மறுக்கப்பட்டும் இருக்கும் எஸ்.சி/ எஸ்.டி மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என, அரசியல் அமைப்பு சட்டத்தில் இட ஒதுக்க்கீடு வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சி, இந்தியா முழுவதும் இருக்கும் எஸ்.சி/எஸ்.டி மக்களின் மக்கள் தொகை அடிப்படையில் எஸ்.சி பிரிவுக்கு 15 %, எஸ்.டி பிரிவுக்கு 7.5 % இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இந்த இட ஒதுக்கீடு மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்புகள், பாராளுமன்ற ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இது பற்றிய முழு விவரம் ஏற்கனவே நவீன புத்தர் என்னும் பதிவில் சொல்லியிருக்கிறேன் எனவே சுருக்கமாக இங்கு
இறுதியாக தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது
இதில் ஒரு பிரிவினர் எங்களை பட்டியலின பிரிவில் இருந்து வெளியேற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்
69% இட ஒதுக்கீட்டில் 18%, பிரிவில் வருபவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்
தமிழகத்தில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 18%, பிரிவில் வருபவர்கள் 1,44,36,620 பேர் இது அன்றைய தமிழக மொத்த மக்கள்தொகையில் 20.01%
இதுல 76 உட்பிரிவுகள் இருக்கு இந்த 76 உட்பிரிவுகளுக்கும் சேர்த்துதான் 18%
நான் சொல்ல விரும்புவது தோராயமாக 1960 ல் இருந்து இன்றுவரை அல்லது 2020 வரை வைத்துக்கொண்டால் 60 வருடம் இந்த 60 வருடங்களில் 18%, இட ஒதுக்கீட்டின் மூலம் எத்தனை சதவிகிதம் பேர் கல்வி பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கிறார்கள்?
இன்னமும் கிராமங்களில் பொருளாதார சூழ்நிலையால் அரசு பள்ளிக்கூடத்திற்குக்குகூட போகமுடியாமல் கல்வியை முழுமையாக படிக்கமுடியாதவர்கள் இருக்கிறார்கள் அப்படி இருக்கையில் பட்டியல் பிரிவில் இருந்து வெளியேறினால் வரும் சந்ததியினரின் கல்வி வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும்,
இது ஒரு பக்கம் இருக்கட்டும் இதற்கு முன் இதை பயன்படுத்தி கல்வி கற்று நல்ல வேலையில் சேர்ந்து பொருளாதாரத்தில் முன்னேறியவர்களின் பங்கு என்ன?இவர்கள் அந்த சமுதாயத்திற்கு என்ன செய்திருக்கிறார்கள்?
எதார்த்தம் எதுவும் செய்யமுடியாது காரணம் அவர்கள் முன்னேறத்தான் பார்ப்பார்களே தவிர அடுத்தவர்களை பார்க்க அவர்களுக்கு நேரம் இருக்காது அப்படி இருக்கையில் எவனோ ஒரு அரசியல் வாதி அவனுடைய சுய நலத்திற்காக செய்கிறான் என்றால் அதற்கு கற்றவர்களும் துணை நிற்க வேண்டுமா?
எங்கிருந்து வந்தது ஆண்டபரம்பரை?
ஒருவன் நாங்கள் ஆண்டபரம்பரை நீங்கள் எனக்கு கீழே சொன்னால் சொல்லட்டும் அப்படி சொல்பவனை கல்வியால் விழ்த்தவேண்டுமே தவிர இப்படி பிரிவில் இருந்து வெளியேறி நானும் ஆண்டபரம்பரை என்று சொல்வதானால் அல்ல.
தொடரும்....பதிவு
No comments:
Post a Comment