Thursday, May 18, 2023

இவங்களெல்லாம் யாருங்க யுவரானர்?


 

இவங்களெல்லாம் யாருங்க யுவரானர்?

பட்டியலினத்தில் இருந்து வெளியேற்றுங்கன்னு கேக்குறாங்களே இவங்க எல்லாம் யாருங்க யுவரானர்?

எங்கிருந்து வந்தாங்க எதுக்கு கேக்குறாங்க?

பல தலைமுறையா ஒரு சில பிரிவினருக்கு அடிமையாயிருந்து கஷ்டப்பட்டு விவசாயம் செய்து அந்த முதலாளி கொடுக்குற கூலிய வாங்கிட்டு நான்தான் இப்படி இருந்தேன் என் தலைமுறை இப்படி இருக்கக்கூடாதுன்னு எப்படியாவது கஷ்டப்பட்டுதன் பிள்ளைகளை படிகவைச்சு அந்த பிள்ளைகளும் அரசு இட ஒதுக்கீட்டை முறையா பயன்படுத்தி ஏதோ ஒரு அரசு வேலையில் சேர்ந்து ஓரளவிற்கு முன்னேறியவுங்க யாரும் கேக்கல கேக்கவும் தோணல ஏனா அந்த தலைமுறையினர் புரிஞ்சுக்கிட்டாங்க நாம முன்னேறனும்னா படிக்கணும் கல்வி ஒன்னுதான் நமக்கு முக்கியம்ன்னு இருந்தாங்க

ஆனா அதற்கு பிறகு வந்த தலைமுறையினர் ஒருசிலர் குடும்ப சூழ்நிலையால முறையா பள்ளிக்கூடம் போகமுடியல அவுங்க பெற்றோரும் கல்வியின் அவசியத்த அவுங்களுக்கு புரிய வைக்கல

ஏதோ ஒரு வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க பணத்த பாத்தவுடன் பணம்தான் முக்கியம் பணம் இருந்தா இங்கு எதையும் ஆளமுடியும் அதிகாரம் பன்னமுடியும்ன்னு நினைச்சுட்டாங்க அந்த பணம் இவர்களின் அறிவை மறைச்சுடுச்சி இவர்கள் தன் சந்ததியினருக்கு அறிவை கொடுக்கணும்னு நினைக்கல சொத்து சேத்துவைச்சா போதும்ன்னு இருக்காங்க,அரசால் கிடைக்கக்கூடிய எந்த நல திட்டங்களை பற்றியும் தெரிஞ்சுக்க விருப்பமில்ல ஏனா பணம் எல்லாவற்றையும் மாத்திடும் என்கிற மன நிலை  

அதே நேரத்தில் இவங்க இட ஒதுக்கீடு பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் தெரிஞ்சிக்க விரும்பல இட ஒதுக்கீடு நம்மள மத்தவுங்ககிட்ட இருந்து பிரிக்கிதுன்னு நினைச்சுகிட்டு இருக்காங்க இதுக்கு பின்னாடி எத்தனை பேருடைய அற்பணிப்பு இருக்கு அதை பற்றியெல்லாம் அவுங்களுக்கு தெரியாது 

அரசு ஒன்னும் சும்மா கொடுக்கல இத இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலம் கொண்டு வந்து பல காலங்களாக பின் தங்கியிருந்தவுங்க முன்னேறனும்னு கொண்டுவந்திருக்கு இத புரிஞ்சுக்காம யாரோ ஒரு அரசியல்வாதி சொல்றான்னு அவன் பேச்ச கேட்டுக்கிட்டு இருக்காங்க,சொல்ற அரசியல்வாதி இதே இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி முன்னுக்கு வந்து பல தலைமுறைக்கு சொத்து சேத்து வைச்சுருக்கான்.இதெல்லாம் இவங்களுக்கு தெரியாது,

அந்த அரசியல்வாதி நடத்துற பள்ளி,கல்லூரியில் போய் நானும் உங்க சாதிக்காரன்தான் என் பிள்ளைக்கு உங்க பள்ளி கல்லூரியில் இலவச சீட்டு கொடுங்கன்னு கேட்டா கொடுக்க மாட்டான் ஏனா அவன் இவங்கள வைத்து அரசியல் செய்றவன் இது இவங்களுக்கு இன்னும் தெரியல.

இவங்களுக்கு  இட ஒதுக்கீடு மூலம் கிடைக்கின்ற அடிப்படை கல்வி,வேலைவாய்ப்பு இதபத்தியெல்லாம் கவலையில்ல சாதிதான் முக்கியம் அதிலும் நான் உயர்ந்த சாதின்னு எல்லாருக்கும் தெரியனும் அதுதான் அவுங்களுக்கு முக்கியம்

இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம் யாரையும் பிரிக்கவோ வேருபடுத்தவோ அல்ல பல காலங்களாக கல்வி,பொருளாதரத்தில் பின் தங்கியவர்களும் முன்னேற வேண்டும் என்கிற நோக்கில்தான் இந்திய அரசியல் சாசனம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.இவர்கள் இனிமேலாவது இதை புரிந்துகொள்வார்கள் என்று நம்புவோம்.

No comments: