Tuesday, April 28, 2009

புதிய மனிதர்கள்!


வணக்கம்!
இது ஒரு கற்பனை இதை நான் நான்கு வருடத்திற்கு முன்னாள் நினைத்தது இன்றுதான் இதற்கு உயிர்கிடத்துள்ளது,வருங்காலத்தில் இதுபோல் நடக்க வாய்ப்புகள் உள்ளது,

இந்த கற்பனைக்கு உயிர்கொடுப்பத்ர்க்காக ஒருசில நிகழ்ச்சிகளை சேர்த்துள்ளேன்,அது என்னவென்று நீங்களே படித்துப்பாருங்கள்.

என்றைக்குமிலாமல் இன்று சென்னை விமானநிலையம் ரொம்ப விறுவிறுப்பாக இருந்தது காரணம் ஒரு தனியார் தமிழ் தொலைக்காட்சி நடத்திய ஒரு பரிசுப்போட்டியில் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அமெரிககாவில் உள்ள நியூயார்க் நகரத்திற்கு இலவசமாக அழைத்து செல்லப்படுகிறார்கள்,


தேர்வு செய்யப்பட்டது மொத்தம் பத்து பேர் இதில் தென் தமிழகத்திலிருந்தும் ஒருசிலர் வந்திருந்தனர்,இதை ஏற்பாடு செய்திருந்த தலைமை நிர்வாகி ஒவ்வொரு வரையும் அறிமுகம் செய்து வைத்தார் ஆனால் வந்தவர்கள் எப்போதும் கிளம்புவோம் என்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர்,


ஒருவழியாக அனைவரும் விமானத்தில் அமர்ந்தனர் இவர்களோடு சேர்த்து மொத்தம் 117 பயணிகள் இருந்தனர் விமானம் கிளம்பியது,

சென்னையை விட்டு கிளம்பி கடல் கடந்து மேலே பறந்துகொண்டிருந்தது
விமான பணிப்பெண் பயணிகளை கவனித்து கொண்டிருந்தனர்,
திடிரென்று விமானம் தடுமாறியது விமானி அனைவரையும் சிட் பெல்டை அணியுமாறு அறிவுறுத்தினார் பயணிகள் சற்று பயந்தனர்,

விமானி அருகில் உள்ள விமான நிலையத்திற்கு தொடர்பு
கொள்கிறார் ஆனால் முடியவில்லை,திடிரென்று விமானம் முழு கட்டுப்பாட்டை இழந்து
தாறுமாறாக பறக்கிறது பயணிகள் அனைவரும் கூச்சளிடுகின்றனர்,
ஒரு பயங்கர சத்தம் ஏதோ வெடித்து சிதறுகிறது ஆனால் என்னவென்று தெரியவில்லை ஆம் வெடித்து சிதறியது வேறெதுவுமில்லை பூமிதான்!

பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்த பூமி அன்று வெடித்து சிதறியது எந்தனை வகையான உயிரினங்கள் இருந்தன எத்தனை அதிசயங்கள் இருந்தன அனைத்தும் அன்று இருந்த இடம் தெரியாமல் போனது

இதற்கெல்லாம் என்ன காரணம் மனிதன் தன்னுடைய அதித புத்தியால் வளர்சியால் தன்னை மட்டுமே காத்துக் கொள்ளவும் தனக்கு மட்டுமே எல்லாம் வேண்டு மென்றும் தான் சுகமாக இருக்கவேண்டுமென்றும் கண்டுபிடித்தான் ஆனால் அவன் இயற்கையை காக்க மறந்துவிட்டன் அதன் விளைவுதான் இது அது மட்டுமா?

காடுகளை அழித்தான் கடலில் மிதந்தான் அதையும் மாசு படுத்தினான்தொழிற்சாலைகளை நிறுவினான் காற்றின் தூய்மையையும் கெடுத்தான் அணு ஆயுதங்களை கண்டுபிடித்தான் அதை பரிசோதித்தான்,


இனபடுகொலை,சாதிகொலைகள், திவிரவாதம்,மதவாதம்,
அது மட்டுமா? பெண்களை மதித்தானா? இணையதளத்திலே எப்படியெல்லாம் பேசுகிறான் அவனுக்கு தாய் தங்கையர்கள் இருக்கிறார்களா? இல்லையா? தெரியவில்லை அவனை பெற்றது ஒரு பெண் அதையும் அவன் மறந்து விட்டான் போலிருக்கிறது அதுமட்டுமா?

இப்போது ஒரு புதிய கலாச்சாரம் வந்திருக்கிறது அது
Incset Sex அதற்கு அவன் சொல்லும் பெயர் இரத்த பந்த உடலுறவு இதை நான் எங்கு போய் சொல்வது இங்கு நான் கேட்டுக்கொள்வது பெண்களே தயவு செய்து உங்களது புகைபடத்தை எக்காரணம் கொண்டும் இணைய தளத்தில் வைக்காதிர்கள் அது கல்யாண மாலை தளமாக இருந்தாலும் சரி உங்கள்தளமாக இருந்தாலும் சரி இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...

ஆனால் மீண்டுமொரு பூமி கிடைக்குமா?

பூமி வெடித்து சிதறியது அதே நேரத்தில் பூமி இருந்த இடத்தில் வேறு ஒரு
கோள் வந்ததது

(இனி விமானத்தைப் பார்ப்போம்)

விமானம் தடுமாறி ஒரு வழியாக ஒரு இடத்தில் போய் விழுந்து நொறிங்கியது,அதில் தப்பி பிழைத்தோர் வெறும் ஒன்பது பேர்
அவர்களுக்கு வெகு நேரம் கழித்துதான் நினைவு திரும்பியது அதில் ஒருவர் பெண்மணி, அதில் முன்று பேரின் நிலைமை மோசமாக இருந்தது அவர்களுக்கு எங்கு இருக்கிறோம் என்பது தெரியவில்லை மெதுவாக அவர்கள் சகச நிலைக்கு திரும்பினர்

(ஆனால் இவர்கள் இருப்பது ஒரு புதிய கிரகம் அந்த புதிய கிரகத்தில் காற்று தண்ணிர் எல்லாம் இருக்குமா என்று கேட்டால் எனக்கு இப்போது தெரியாது பொறுத்திருந்து பாருங்கள், இந்த நேரத்தில் ஒன்றை நான் நினைவு கூர விரும்புகிறேன் ரயில் வண்டி போய்கொண்டிருக்கிறது திடிரென்று ஒரு விபத்து ஏற்படுகிறது அது முன்பக்கமாக இருக்கும்போது பின்னால்னுள்ள பெட்டிகள் முன்னோக்கிதானே நகரும் அதுபோலத்தான் சூரிய குடும்பத்திலுள்ள கோள்கள் அனைத்தும் நீல் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன இவை அனைத்தும் ஒரு குறிப்பட்ட விசையுடந்தான் சுற்றி வருகின்றன அப்படியானால் பூமி வெடித்து சிதறும்போது அந்த இடத்திற்கு வேறு ஒரு கோள் வரும்தானே?)

இனி பயணிகளை பார்ப்போம்

ஒருவர் சொல்கிறார் அப்பா முருகா என்ன காப்பாத்துன உனக்கு 108 தேங்காய் உடைக்குறேண்டா என்று சொல்கிறார்,இன்னொருவர் மண்டியிட்டு தொழுகை செய்கிறார் இன்னொருவர் எல்லாம் வல்ல இயேசு பிரானே எல்லாம் உன் கருணை என்று சொல்கிறார் இப்படி அவரவர் வணங்குகிறார்கள்

ஒருவர் கேட்கிறார் எல்லாம் சரிதான் உங்களுக்கு தெரியுமா நாம் எங்கு இருக்கிறோமென்று என்று கேட்கிறார்,

அப்பா என்னோட நிலம் எல்லாம் போச்சா?
இன்னொருவர் ஐயோ என்னோட
பங்களா கார் எல்லாம் போச்சா?உங்களை திருத்தவே முடியாது திருந்தவும் விட மாட்டிர்கள்,

ஒருவர் சொல்கிறார் எங்க முருகபெருமாள் மட்டும் இல்லனா இந்நேரம் நம்மளும் செத்துப்போயிருப்போம் என்று சொல்கிறார்

இன்னொருவர் இல்ல எல்லாம் வல்ல இயேசு பிரானின் கருணைதான் நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று சொல்கிறார்
இன்னொருவர் இல்லை இல்லை எல்லாம் அல்லாவின் செயல் என்று சொல்கிறார்
இவர்கள் வாக்குவாதத்தில் அந்த முன்று பேரை இவர்கள் கவனிக்கவில்லை
அவர்கள் இறந்து விட்டார்கள்
நிறுத்துங்கள் உங்க மூவரால் முன்று பேர் இறந்தது விட்டார்கள்
அப்போதுதான் மற்றவர்கள் யோசிக்கின்றனர்,

எல்லாரும் ஒருநிமிடம் கவனிங்க இப்ப நாம இருக்கிறது ஒரு புது கிரகம் இங்க என்ன இருக்குதுன்னே தெரியாது ஆனால் நம்மால் உயிர் வாழ முடிகிறது,
அவர் சொல்கிறார் எல்லாரும் நம்மை நாமே அறிமுக படுத்திக்கலாம் என்று சொல்கிறார் என்னோட பெயர் சுரேஷ் உங்க பெயர சொல்லுங்க என்று கேட்கிறார் ஒருவர் நான் இஸ்மாயில், நான் அந்தோணி, நான் குமரன்,நான் புனிதா,நான் பிரணாப் ,


அவர்களுடைய புதிய பயணம் புதிய கோளில் தொடர்கிறது..


என்னுடைய கேள்வி?

முதலில் அவர்கள் அங்கு எப்படி வாழப்போகிறார்கள்?

இரண்டாவது கேள்வி அங்கு யார் ஆதாம் யார் ஏவாள்?யார் சிவன் யார் பார்வதி,யார் அல்லா யார்?

இவர்கள் தான் புதிய மனிதர்களா?
இவர்கள் தான் பூமியில் வாழ்ந்து சென்றவர்களா?

இவைகள் அனைத்திற்கும் விடை என்ன?

விடை
என்னவாக இருக்கும்?

முதல் இரண்டு நாட்கள் அவர்களுக்கு உணவைப்பற்றி கவலை ஏற்படவில்லை காரணம் விமானத்தில் உள்ள உணவு வகைகள் போதுமானதாக இருந்தது,

முன்றாவது
நாள் என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் யோசிக்க ஆரம்பித்தனர்

பூமியில் எப்படி வாழ்ந்தான்

எத்தனை வகையான உணவு வகைகள்
ஆனால் இன்று அவனுக்கு கிடைத்ததை சாப்பிடவேண்டிய கட்டாயம்


தேடினார்கள்
அவர்கள் உணவை மட்டுமா?அவர்களுக்கு தேவையானா அனைத்தையுமே ஆம் என்ன தேவை அவர்களுக்கு
உன்ன உணவு, இருக்க இடம், இதுதான் இப்போதைய தேவை


இந்த புதிய மனிதர்கள் பஞ்ச பூதங்களாக இருந்து வாழப்போகிறார்களா? அல்லது பஞ்ச பாண்டவர்களாக மாறி தங்களை தாங்களே அழித்துக் கொள்ளப்போகிறர்களா?

அவர்களில் யார் தாமஸ் ஆல்வா எடிசன்? யார் ரைட் சகோதரர்கள்?
யார் சாக்ரடிஸ்?,யார் மகாத்மாகாந்தி? யார் விவேகானந்தர்?

பூமியில் வாழ்ந்த வாழ்க்கையைப் பார்ப்போம்!

பூமியில் வாழ்ந்த மனிதன் எப்படிப்பட்டவன்?
ஆறறிவு படைத்தவன் அவன்தான் பிரித்தான் உருவத்தை வைத்து நிறத்தை வைத்து ஆம்!,இனம்,மதம்,நிறம் ஒரு உருவத்திற்கு அவன் சொன்ன முதல் வித்தியாசம் அது மட்டுமா? இனத்தைப் பலவாராக பிரித்தான்,மதத்தையும் பலவாறாக பிரித்தான் அதற்கு உருவத்தையும் அவனே
கொடுத்தான்,அதற்கு கோவிலையும் கட்டினான்,பல இலட்சங்களை செலவு செய்தான்,அனைத்தையும் அவனே எடுத்துக் கொண்டான் இல்லாதொரு ஏதாவது கொடுத்தானா?

இந்து மதத்தை இரண்டாக பிரித்து சைவம் சமணம் என்றான்,கிருத்துவ மதத்தை இயே
சுநாதர் அன்னை மாதா என்று சொன்னான்

இன வெறியாலும் மதவெறியாலும் அவன் செய்த கொலைகள் ஏராளம்
மதவெறிக்கு கோத்ரா இரயில் எரிப்பு போதாதா?
இனவெறிக்கு குர்தின
மக்களை கொன்றது போதாதா?

பெண்களை மதித்தானா? பெண்களை கடவுளுக்கு சமமென்றான் பிறகு காட்சிப்பொருளாக மாற்றினான்,அது மட்டுமா காமத்திற்கும் அல்லவா பயன்படுத்தினான்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...

இப்படி வாழ்ந்த மனிதன் புதிய கிரகத்தில் மட்டும் எப்படி வாழ்வான்?
அவர்கள் புதிய கிரகத்திற்குதான் புதிய மனிதர்கள் உண்மையில் மனித உருவத்தில் இருக்கும் விலங்கு.

இதைப்பற்றிய உங்களது கருத்துக்களை சொல்ல விரும்பினால் சொல்லலாம்.

tsk1276@gmail.com









No comments: