Friday, April 3, 2009

முடிவைத்தெரியாது!


பிரபஞ்சத்தைத்தெரியுமெனக்கு
ஆனால் பூமியைத்தெரியாது!

கடவுளைத்தெரியாதெனக்கு
ஆனால் கற்சிலைக்கிருக்கும்
சக்தியைத்தெரியும்!

நான் வந்தது தெரியாதெனக்கு
ஆனால் போகிற இடம் தெரியும்!

என் பெயரைத்தெரியுமெனக்கு
ஆனால் சொல்லத்தெரியாது!

என் உள்ளத்தைதெரியுமெனக்கு
ஆனால் என் உருவத்தைத்தெரியாது!

பணிவைத்தெரியாதெனக்கு
ஆனால் பண்பாக ந்டக்கத்தெரியும்!

நன்றாக பேசத்தெரியாதெனக்கு
ஆனால் நன்மக்களின் பேச்சுபிடிக்கும்!

நண்பர்களைத்தெரியாதெனக்கு
ஆனால் அவர்களின் நட்பைத்தெரியும்!

காதலிக்கத்தெரியாதெனக்கு
ஆனால் அதைவிட பன்மடங்கு
அன்பு செலுத்தத்தெரியும்!

வாழ்க்கை முறையைத்தெரியும்
ஆனால் என் வாழ்வின்
முடிவைத்தெரியாது!

எப்படித்தெரியும்?
அதுதான் உன்னிடமுள்ளதே!


No comments: