Friday, April 3, 2009

நான் என்ன செய்ய!

பிள்ளையப் பெற்றதாய்
சொல்கிறாள் ஏன்
பெற்றேனென்று!

கற்றவன் சொல்கிறான்
எதற்கு படித்தேனென்று
தெரியவில்லை!

காதலர்கள் சொல்கிறார்கள்
நாங்கள் காதலிக்கவில்லை என்று!

இல்வாழ்க்கை எதற்கென்று
கேட்கின்றனர் புதுமண
தம்பதியினர்!

பணம் தேவையில்லைஎன்று
சம்பாதிப்பவன் சொல்கிறான்!

சாப்பாடுவேண்டாமென
சாப்பிட்டுக்கொண்டே சொல்கிறான்!

உறங்குபவன் சொல்கிறான்
நான் உறங்கி வெகு நாட்களாகியதென்று!

வாழ்க்கைப் பிடிக்கவில்லை என்று
வாழ்ந்து கொண்டிருப்பவன் சொல்கிறான்!


இவர்களை சொல்ல எனை
ஏன் பயன்படுத்தினாய் என்று
எனது பேனா கேட்கிறது எனை!

நான் என்ன செய்ய!

No comments: