நான் இருக்கவிரும்பாத இடங்கள்!
அதிகாரத்தால் அராஜகம்
செய்யும் காவல்நிலையம்!
நீதி தேவதையின் கண்
திறந்திருக்கும் நீதி மன்றங்கள்!
அதிக பூஜ்யங்களை கொண்ட பணம்!
எனது பெயரை சொல்லி
தவறு செய்யும் உள்ளங்கள்!
அகிம்சையை நான் ஆரம்பித்ததாக
பாட புத்தகங்களில் போட்டுள்ளிற்கே தவிர
உண்மையாக நமது தேசத்தில்
அகிம்சையை காணவில்லை!
உண்மை இல்லாத இந்த தேசத்தில்
நான் இறந்துமிருக்க விரும்பவில்லை!
இவைகளை சொல்வது வேறு யாருமில்லை
நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment